நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ஈஸ்வரன் திரைப்படம், குடும்ப ரசிகர்களை கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றது.
அதனை தொடர்ந்து சிம்பு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தில் அவருக்கு வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்து வருகிறார்.

இந்நிலையில் வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி சிம்புவின் பிறந்தாள் அன்று ரசிகர்கள் யாரும் தன்னை சந்திக்க வரவேண்டாம் என்றும், அப்போது அவர் வெளியூர் செல்ல இருப்பதால், தன்னை சந்திக்க வந்து விட்டு யாரும் ஏமாற்றம் அடைய வேண்டாம் என கூறியுள்ளார்.
மேலும் தனது பிறந்தநாள் அன்று மாநாடு படத்தின் டீஸர் வெளியாகும் அதை கண்டு மகிழும் படி கூறியுள்ளார்.